அக்ரஹாரத்தில் பூனை என்ற சிறுகதையில் இரண்டு முக்கிய முரண்கள். [1]பாட்டியும் ஒரு பூனையும்.
[2]புஷ்டிமார்க்க தத்துவமும் நடைமுறையும்.
திலீப்குமார் குஜராத்திப் பாட்டிகள், எலி, பூனைகளை வைத்துக் கதை எழுதுவதில் கைதேர்ந்தவர். அப்படி எழுதிச்செல்லும்போது குஜராத்திகள் சித்திரம், கூடவே அவர்களது சுபாவம் மொழிநடை இவை மிகவும் குறைவான சொற்செலவில் வந்து விடும்.
அக்ரஹாரத்தில் பூனை கதையில் பப்லுப் பாட்டிக்கு தண்ணீர் காட்டும் ஒரு கில்லாடிப் பூனை வரும். அதை விரட்ட அவள் கையாண்ட குரூரமான தந்திரம் தான் முக்கிய விஷயம்.இந்தக்கதையை மனசை விட்டு லேசில் அகன்று விடாத கலை நுட்பத்தோடு புனைந்திருக்கிறார் திலீப்குமார்.
[2]புஷ்டிமார்க்க தத்துவமும் நடைமுறையும்.
திலீப்குமார் குஜராத்திப் பாட்டிகள், எலி, பூனைகளை வைத்துக் கதை எழுதுவதில் கைதேர்ந்தவர். அப்படி எழுதிச்செல்லும்போது குஜராத்திகள் சித்திரம், கூடவே அவர்களது சுபாவம் மொழிநடை இவை மிகவும் குறைவான சொற்செலவில் வந்து விடும்.
அக்ரஹாரத்தில் பூனை கதையில் பப்லுப் பாட்டிக்கு தண்ணீர் காட்டும் ஒரு கில்லாடிப் பூனை வரும். அதை விரட்ட அவள் கையாண்ட குரூரமான தந்திரம் தான் முக்கிய விஷயம்.இந்தக்கதையை மனசை விட்டு லேசில் அகன்று விடாத கலை நுட்பத்தோடு புனைந்திருக்கிறார் திலீப்குமார்.
புதிதாக எழுத வருவோரும் ஏற்கெனவே எழுதிக் கைத்தேர்ச்சி பெற்றோரும் திலீப் குமாரிடம் கற்க வேண்டியது நிறைய உண்டு .
ஒரு சிறுகதையில் சூழ்நிலையை கண்முன் நடமாட வைக்க பலவிதமான உத்திகளை புதிது கையாள வேண்டிய கட்டாயம் இன்றைய இலக்கியச் சூழலில் நேர்ந்திருக்கிறது. டீவி,யூட்யூப், மொபைலில் படம் எடுக்கும் வழக்கம் எல்லாம் வந்து காட்சிகளை பிரசன்னப் படுத்த தொழில் நேர்த்தியை வலியுறுத்தும் நிலை இன்று. அதுவும் காமெராவை ஜூம் செய்வது, க்ளோசப், டிராலி ஷாட் பேன் செய்வது..ஓவர்லாப் என்றெல்லாம் பல டெக்னிக் உத்திகள் வந்து கிட்டத்தட்ட கதையே வாசிக்க வேண்டாம் என்ற நிலை உதயமாகி விட்டது.
ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஜூம் செய்வது, க்ளோசப், டிராலி ஷாட் என்றெல்லாம் டெக்னிக் வைத்து பாத்திரங்களுக்கு உயிர்ப்பும் ஐம்புலன் நுகர்ச்சி வெளிப்பாடுகளும் வழங்கி அவர்களை நம்மிடையே நடமாட வைத்து விடுகிறார்.
பப்லுப் பாட்டி என்ற பாத்திரத்தின் உருவத்தோற்றத்தை கேரிகேசர் என்ற கோட்டோவிய முறை மூலம் நம் முன் கொண்டு வந்து விடுகிறார்
ஒரு சிறுகதையில் சூழ்நிலையை கண்முன் நடமாட வைக்க பலவிதமான உத்திகளை புதிது கையாள வேண்டிய கட்டாயம் இன்றைய இலக்கியச் சூழலில் நேர்ந்திருக்கிறது. டீவி,யூட்யூப், மொபைலில் படம் எடுக்கும் வழக்கம் எல்லாம் வந்து காட்சிகளை பிரசன்னப் படுத்த தொழில் நேர்த்தியை வலியுறுத்தும் நிலை இன்று. அதுவும் காமெராவை ஜூம் செய்வது, க்ளோசப், டிராலி ஷாட் பேன் செய்வது..ஓவர்லாப் என்றெல்லாம் பல டெக்னிக் உத்திகள் வந்து கிட்டத்தட்ட கதையே வாசிக்க வேண்டாம் என்ற நிலை உதயமாகி விட்டது.
1982 நவம்பர் 28 திலீப்குமார் திருமண வரவேற்பில் |
பப்லுப் பாட்டி என்ற பாத்திரத்தின் உருவத்தோற்றத்தை கேரிகேசர் என்ற கோட்டோவிய முறை மூலம் நம் முன் கொண்டு வந்து விடுகிறார்
பப்லுப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைத்திட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. கழுத்தில் துளசி மாலை. செக்கச்செவேலென்று பழம் போல் இருப்பாள்.
மாதுரியின் பாத்திர அறிமுகம்
மாதுரியின் பாத்திர அறிமுகம்
நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு என்று அவள் தான் சற்று முன் கூறியிருந்தாள். கடலை மாவு கமகம என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள் சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவ விடாமல் இரு விரல்களால் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம் போல் அமைதியாக நின்றாள் மாதுரி.
பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, “அரே…அரே… பிலாடி…பிலாடி…. மதூ பிலாடி… மதூ பிலாடி” ( பிலாடி - பூனை, மதூ - மாதுரி.) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக் கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.
பப்லுப் பாட்டியின் கேரக்டர் சட்டென்று மனசில் ஒரு பூத்தையல் மிஷின் அழுத்தத்தைக்கிற மாதிரி ஒரு வர்ணனை
சமையலறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச் சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரி முன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச் சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்ட, குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடிடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிருந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணணுக்குக் கட்டை விரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்த பின் மீண்டும் அவற்றைக் குட்டிக் குட்டி மெத்தைகள் மேல் உட்கார வைப்பாள். பிறகு, அலமாரிக்கு முன் ஒரு பலகை மேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையும் சிறு சிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கி வைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச் சின்ன பீடாக்கள் கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகு தான் பச்சைத் தண்ணீர் கூடக் குடிப்பாள்.
பப்லுப் பாட்டியின் மார்க்க ஞான மேதாவிலாசம் குறித்து -
பப்லுப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரை கண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாக, புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தைத் தலைகீழாக ஒப்பிப்பாள். தத்தவ விசாரத்தில் கூட அதன் நுட்பமான எல்லைகள் வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி மார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசித் தெளிந்து விட்டுப் போனாள்) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள் கூட உஷாராக இருப்பார்கள்.
பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, “அரே…அரே… பிலாடி…பிலாடி…. மதூ பிலாடி… மதூ பிலாடி” ( பிலாடி - பூனை, மதூ - மாதுரி.) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக் கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.
பப்லுப் பாட்டியின் கேரக்டர் சட்டென்று மனசில் ஒரு பூத்தையல் மிஷின் அழுத்தத்தைக்கிற மாதிரி ஒரு வர்ணனை
சமையலறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச் சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரி முன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச் சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்ட, குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடிடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிருந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணணுக்குக் கட்டை விரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்த பின் மீண்டும் அவற்றைக் குட்டிக் குட்டி மெத்தைகள் மேல் உட்கார வைப்பாள். பிறகு, அலமாரிக்கு முன் ஒரு பலகை மேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையும் சிறு சிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கி வைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச் சின்ன பீடாக்கள் கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகு தான் பச்சைத் தண்ணீர் கூடக் குடிப்பாள்.
கிரியா அலுவலகத்தில் |
பப்லுப் பாட்டியின் மார்க்க ஞான மேதாவிலாசம் குறித்து -
பப்லுப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரை கண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாக, புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தைத் தலைகீழாக ஒப்பிப்பாள். தத்தவ விசாரத்தில் கூட அதன் நுட்பமான எல்லைகள் வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி மார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசித் தெளிந்து விட்டுப் போனாள்) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள் கூட உஷாராக இருப்பார்கள்.
எந்தப் பகுதியில் கதை நடக்கிறது என்ற விவரிப்பில் ஒரு சிறிய கால விளக்கம் உண்டு
தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பின் புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் ப வடிவில் வ்நதது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைக்கூட நுழைந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்க சாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும், தத்துவார்த்தக் காரணங்கள் தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்களை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின் மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பாலகிருஷ்ண பிரதானமான புஷ்டி மார்க்கத்திலும பஷுபட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம் தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமா போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரன் தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளங்கிக்கொண்டிருந்தது போலும் - அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம் வரை.
தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பின் புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் ப வடிவில் வ்நதது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைக்கூட நுழைந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்க சாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும், தத்துவார்த்தக் காரணங்கள் தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்களை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின் மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பாலகிருஷ்ண பிரதானமான புஷ்டி மார்க்கத்திலும பஷுபட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம் தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமா போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரன் தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளங்கிக்கொண்டிருந்தது போலும் - அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம் வரை.
மே மாதம், மேற்கூறிய கிழட்டு பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக் கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்திய வர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25 ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9 ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லுப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்து வைத்து விட்டு பாலகிருஷ்ணணுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப் பாலை நக்கித் தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் அது திரும்பிக் கொண்டிருந்த போது தான் முதல் முறையாகக் கண்ணில் பட்டது.
பூனையைப் பார்த்ததும் பப்லுப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, “அரே…அரே… பிலாடி…பிலாடி…. மதூ பிலாடி… மதூ பிலாடி” ( பிலாடி - பூனை, மதூ - மாதுரி ) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக் கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள்.
கில்லாடிப் பூனை பற்றிய அறிமுகம்
தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம் தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிரு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கிழட்டுப்பூனை.
தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம் தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிரு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கிழட்டுப்பூனை.
பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ (என்கிற நட்வர் லால்)பற்றிய அறிமுகம் -
நட்டூ பார்ப்பதற்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமந்தம். சத்தம் போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாஸ் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2 ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1 ஆம் நம்பரில் ஆயிரமும் 2 ஆம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா - டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடை மாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய் விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல் தான் திரும்புவான். சனிக் கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மாதுரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.
“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்லையா?” என்று பதறினான் நட்டூ.
“அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்த கழுதையை எங்காவது விரட்டி விட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா… பேசுகிறான் பார்.”
“எங்கேயென்று போய் விரட்டுவது, பா? விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால் தான். பூஜை பண்ணுகிறேன் என்று ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக் கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய் - அய்யோ)
“போதும் போதும், ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவன் தான் இந்த மாதிரி வேலைக்கு லாயக்கு.
“உன் மூளை பிசகித்தான் விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்று போட்டு விடுவான். ஜாக்கிரதை”
“நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.
மைத்துனர் மற்றும் மைத்துனர் மனைவியுடன் |
சூரி பற்றியஅறிமுகம் -
சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். பளிச் சென்று உடைகள் அணிந்து, நண்பர்கள் புடை சூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக் கொண்டு உற்சாகமாகத் திரிந்து கொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் சரளமாகப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்புத்தண்டாவுக்கும் அவன் தான் கட்டைப் பஞ்சாயத்து. நீதிக்குப் பின்தான் சாதி என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்பு செய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரரின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.
சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். பளிச் சென்று உடைகள் அணிந்து, நண்பர்கள் புடை சூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக் கொண்டு உற்சாகமாகத் திரிந்து கொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் சரளமாகப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்புத்தண்டாவுக்கும் அவன் தான் கட்டைப் பஞ்சாயத்து. நீதிக்குப் பின்தான் சாதி என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்பு செய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரரின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.
மாதுரியின் பாத்திர வார்ப்பு -
சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மாதுரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள். அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப் பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத் துவங்கிவிடும் என்று கூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத பல சமயங்களில் அது முன் கதவருகே வந்து களைத்துப் போன குரலில் மியாவ் என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மாதுரி. ஒரு வகையில் தனக்கும் அந்தப் பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப்பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும். அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப் போல் மலடுதானா. அதன்நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப் போல் தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மாதுரி . பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒருநாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப் போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான வாய்ப்பு வயோதிகத்தில் நிச்சயம்இருக்காது. செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில்? பப்லிப் பாட்டியின் இதயத்திலா? தன் கணவன் நட்டூவின் இதயத்திலா? எங்கே..எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம்? அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?
மாதுரி ரியாக்சன்
சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மாதுரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள். அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப் பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத் துவங்கிவிடும் என்று கூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத பல சமயங்களில் அது முன் கதவருகே வந்து களைத்துப் போன குரலில் மியாவ் என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மாதுரி. ஒரு வகையில் தனக்கும் அந்தப் பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப்பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும். அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப் போல் மலடுதானா. அதன்நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப் போல் தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மாதுரி . பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒருநாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப் போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான வாய்ப்பு வயோதிகத்தில் நிச்சயம்இருக்காது. செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில்? பப்லிப் பாட்டியின் இதயத்திலா? தன் கணவன் நட்டூவின் இதயத்திலா? எங்கே..எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம்? அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?
மாதுரி ரியாக்சன்
பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மாதுரி.
நட்டூவும்பூனையும் -
நட்டுவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும் போது சூரியைப் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது.
நட்டுவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும் போது சூரியைப் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது.
மனே கயி தீத்துந்நே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்” (என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தை விட்டு என்ன, அமெரிக்காவிற்கே கூட பாக் செய்ய மாட்டேனா என்ன?”
நட்டூ கலவரத்துடன், அதெல்லாம் வேண்டாம். 25 ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும் என்றான்
[பூனை பாக் செய்யப்படக்கூடாது என்ற இளகிய குஜராத்தி மனசு வெளிப்படும் இடம் இது]
[பூனை பாக் செய்யப்படக்கூடாது என்ற இளகிய குஜராத்தி மனசு வெளிப்படும் இடம் இது]
“டன், நட்டூ அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.
ஹன்ஸ்ராஜ் அறிமுகம்
மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாக கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று தான் வருவார்.
மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாக கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று தான் வருவார்.
பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத் தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடி போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார் போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.
நிம்மு அறிமுகம் -
பப்லுப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க ஆரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் ரொம்பவும் குண்டாகிப்போன போதுதான் அது ஏதோ வியாதி என்று தெரிந்தது. ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன்இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கெட் தைக்க 2 ¼ மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும். வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல் கட்டையே மாற்றி வைத்திருந்தார் ஹன்ஸ்ராஜ்.
பப்லுப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க ஆரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் ரொம்பவும் குண்டாகிப்போன போதுதான் அது ஏதோ வியாதி என்று தெரிந்தது. ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன்இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கெட் தைக்க 2 ¼ மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும். வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல் கட்டையே மாற்றி வைத்திருந்தார் ஹன்ஸ்ராஜ்.
நிம்மு தன் பருமனைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள் கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலறைக்குள் ஒரு சிறு குழந்தையைப் போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம் போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள் தான் உயிர் வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். நான் செத்தால் என்னை தூக்குவதற்குப் பதினாறு பேர் தான் வர வேண்டும் என்று சொல்லி கெக்கெக் கெக்கெ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ் ராஜூக்கு தன் நிம்மு மீது உயிர்.
ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்முரத்தில் பாட்டி கூட அதை மறந்துவிட்டிருந்தாள்.
ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும் போது நிம்முவுக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.
“இந்த தீபாவளிக்காவது நிம்முவை அழைத்து வர முடியுமா என்று பாருங்கள் என்றாள்.
அவள் நிலமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துதான் அழைத்து வர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”
என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பி விட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கும் துப்பு கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.
வாசல் பக்கம் நட்டூ ரிக்ஷாக்கூடக் கூட்டி வந்துவிட்டான்.
வாசல் வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். போய்வருகிறேன் சகோதரி என்று மாதுரி யைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்
சூரி யுடன் கிழட்டுப்பூனை-
பத்து நாட்கள் கழித்து, திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25 ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப்பூனையுடன். பப்லுப் பாட்டி வீட்டுக் கதவருவே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துக்கொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்த்து ஒரு குழந்தையைப் போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.
பத்து நாட்கள் கழித்து, திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25 ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப்பூனையுடன். பப்லுப் பாட்டி வீட்டுக் கதவருவே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துக்கொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்த்து ஒரு குழந்தையைப் போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.
''என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லுப்பாட்டி.
''அதுதான் சூரி தெரிந்துகொள்ளுங்கள். இந்த பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்ட டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம் செய்வதென்றால் சும்மாவா! கொண்டு போய் விடுவதற்கு முன் உங்களிடம் காண்பித்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டு போய் விடட்டும். திருவொற்றியூரிலா திருவான்மியூலா?
சூரி தன் வலது கையால் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண் போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.
பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள் போல், டேய் சூரி போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்து விட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.
அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச் சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டு வரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்கு முன் நீட்டினான்.
பப்லுப்பாட்டி பூனை எப்படித் தண்டித்தாள் என்று இங்கே சொல்வது கதை வாசிக்க வேண்டிய உங்கள் உற்சாகத்தைக் கெடுத்து விடும்.நீங்களே வாசிப்பது நல்லது.
திலீப்குமாரின் நகைச்சுவை ரசம் எந்த வகை? வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும் வகை. மர்மப் புன்முறுவல் , நமுட்டுச் சிரிப்பு ரகம்.
அடுத்த முரணான புஷ்டிமார்க்க தத்துவமும் நடைமுறையும் குறித்து சொல்வழியாக அன்றி பப்லுப்பாட்டியின் செயல் வழி அணுகுமுறையை திலீப் குமார் அணுகும் விதம்
அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லுப் பாட்டி ஆரம்பித்தாள். “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்..”